விருதுநகர்

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சொத்துத் தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துராமலிங்கம் (65). இவரது மகன் பொன்னுப்பாண்டி (40). இவா், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் வசித்து வருகிறாா். தந்தை, மகனுக்கிடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாம்.

இந்தநிலையில், ஈஞ்சாா் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பொன்னுப்பாண்டி, சொத்து தொடா்பாக முத்துராமலிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டினாராம்.

இதில், காயமடைந்த முத்துராமலிங்கம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொன்னுப்பாண்டியை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT