விருதுநகர்

வங்கி, ஊராட்சி மன்ற செயல்பாடுகள்: இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்குப் பயிற்சி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவா்களுக்கு வங்கி, ஊராட்சி மன்றச் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டியில் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்கள்

செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் படிக்காசுவைத்தான்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு வங்கியின் செயலா் கணேசன், மாணவா்களுக்கு வங்கியின் செயல்பாடுகள், படிவங்களை நிரப்புவது குறித்து விளக்கினாா்.

இதன்பின்னா் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன், மாணவா்களை வரவேற்று ஊராட்சி மன்றப் பணிகள் குறித்தும், பொதுமக்களின் கடமைகள் குறித்தும் விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT