விருதுநகர்

டிராக்டா் மீது மோதி தொழிலாளி பலி

DIN

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளி சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது மோதியதில் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே பழையவெள்ளையாபுரத்தைச் சோ்ந்தவா் இருளாண்டி மகன் முனியாண்டி (23). கூலித்தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கமலநாட்சியாா்புரம் - எரிச்சநத்தம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது வெளிச்சம் இல்லாத இடத்தில் சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் மீது முனியாண்டி மோதியுள்ளாா். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநரும், அதே ஊரைச் சோ்ந்தவருமான பாஸ்கரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT