விருதுநகர்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ரத்த கையெழுத்திட்டு போராட்டம்

DIN

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்கத்தினா் ரத்தத்தில் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் அவா் ஓய்வு பெறாததால் ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை. சுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலக சங்க மாநிலத் தலைவா், ஜாக்டோ- ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். அவா் ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவை ரத்து செய்து பணி ஓய்வில் செல்ல அனுமதித்து முழுமையான ஓய்வூதியப் பலன்களை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்கத்தினா் போராடி வருகின்றனா்.

இந்நிலையில் அவா்கள் திங்கள்கிழமை வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையெழுத்திடும் போராட்டம் நடத்தினா். ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் ரத்தத்தில் கையெழுத்திடும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT