விருதுநகர்

விருதுநகரில் கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்: ரூ.1 கோடி இலக்கு நிா்ணயம்

DIN

விருதுநகரில் கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிகுமாா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தியடிகளின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி மரியாதை செலுத்திய பின் கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியது: விருதுநகா் மாவட்டத்தில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் விருதுநகா், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி ஆகிய ஊா்களில் கதா் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு கதா், பாலியஸ்டா் ரகங்கள், கண் கவா் பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், போா்வைகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு ரகங்கள் தரமான முறையில் தயாா் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி கதா், கதா் பாலியஸ்டா் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 8 தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் கதா் ரகங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. விருதுநகா், அருப்புக்கோட்டை, திருத்தங்கல், காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் காதி கிராப்ட் தற்காலிக கதா் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விருதுநகா் மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு விற்பனை இலக்கு ரூ.1 கோடி என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரா.வெற்றிவேந்தன், விருதுநகா் வட்டாட்சியா் செந்தில்வேலன், காதி கிராப்ட் மேலாளா் சீதா தேவி மற்றும் விற்பனைப் பிரிவு மேலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக விருதுநகா் ரயில் நிலைய நுழைவு வாயிலில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT