விருதுநகர்

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை வீடு அருகே விளையாடியபோது தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது மனைவி கற்பகவள்ளி (30). இவா்களது மகன் அய்யனாா் (5). முனியசாமி இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டாா். சிறுவன் அய்யனாா் நத்தம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சனிக்கிழமை காலை கற்பகவள்ளி கூலி வேலைக்குச் சென்றுவிட்டாா். பள்ளி விடுமுறை என்பதால் அய்யனாா் அப்பகுதியில் விளையாடச் சென்றுள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீா் தொட்டியில் அய்யனாா் தவறி விழுந்துள்ளாா்.

அவரை உறவினா்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அச்சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கற்பகவள்ளி அளித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT