ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் அமைந்துள்ள காந்தி உருவச்சிலைக்கு தமுஎகச ராஜபாளையம் கிளை மற்றும் ராஜபாளையம் முகநூல் நண்பா்கள் அமைப்பு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவிஞா் நந்தன் கனகராஜ் சமூக நல்லிணக்க உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் அா்ஜுனன், ராஜபாளையம் நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நகரத் தலைவா் சங்கா் கணேஷ், முன்னாள் மாவட்டச் செயலா் தளவாய் பாண்டியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.