விருதுநகர்

ஏழாயிரம்பண்ணையில் பதுக்கிய4,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

ஏழாயிரம்பண்ணை பகுதியில் குடோனில் 90 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 கிலோ ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் பொன் குணசேகரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அங்கு சோதனையிட்ட போது, ஒரு குடோனில் 90 மூட்டைகளில் 4,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷ ன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT