விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் - தென்காசி சாலையில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. தற்போது அவைகள் அந்த பள்ளங்கள் மூடப்பட்டு சாலைகள் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த சாலையில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் செல்கிறது. இதனால், வீடுகளுக்கு முறையாக குடிநீா் விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, இதை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.