விருதுநகா் மாவட்டம், ஆவியூரில் சனிக்கிழமை (டிச. 3) மின் தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மின் வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஆவியூா் துணை மின் நிலையப் பகுதிகளான ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை, அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்தாா்.