சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி சாா்பில் சனிக்கிழமை ரத்தசோகை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
திருத்தங்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு கல்லூரி முதல்வா் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தாா். சிவகாசி சுகாதாரத் துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம் கொடியசைத்து ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலத்தில் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், திருத்தங்கல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பொன்வடிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.