விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சனிக்கிழமை காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி (57). இவரது மகன் திருநெல்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கல்வி பயின்று வருகிறாா். அவரைப் பாா்க்க சக்கரவா்த்தி தனது நண்பா்கள் 3 பேருடன் காரில் திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள பெத்துரெட்டிபட்டி சந்திப்பில் காா் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சக்கரவா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த பொன்ராஜ் (48), ஜெபஸ்டியன் (48), ரேக்ளான்ட் (60) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் காயமடைந்த மூவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரேக்ளான்ட் உயிரிழந்தாா்.
இதையடுத்து, பலத்த காயமடைந்த பொன்ராஜ், ஜெபஸ்டியன் ஆகியோருக்கு சாத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து, சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.