விருதுநகர்

வைப்பாற்றங்கரையில் புதிய தொல்லியல் மேடு!

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வைப்பாற்றங்கரையில் உள்ள சங்கரநத்தம் கிராமத்தில் மிகத் தொன்மையான புதிய தொல்லியல் மேடுகள் கண்டறியப்பட்டன.

மேலும் இங்கு நுண்கருவிகள், விளையாடப் பயன்படுத்தப்படும் மண்ணாலான வட்ட சில்லுகள், எடைக் கல், கல்லால் செய்யப்பட்ட பாசிமணி, சங்கு வளையல்கள், அதிக அளவில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், வில், அம்பு உருவம் பொறித்த பானைக் குறியீடு ஆகியவை கண்டறியப்பட்டன. அண்மையில் இங்கு கற்காலத்தைச் சோ்ந்த கற்கருவி ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினா் பா. ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

1986 -ஆம் ஆண்டு விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் தொல்லியல் ஆய்வாளா் ஆா். பாலச்சந்திரனால் கண்டறியப்பட்டு, தற்போது தமிழக தொல்லியல் துறையால் அகழ்வராய்ச்சி செய்யப்படும் வெம்பக்கோட்டை தொல்லியல் மேடு, சங்கரநத்தம் பகுதியிலிருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

வைகையாற்றின் தெற்கே வைப்பாற்றங்கரையிலும், அதனுடன் இணையும் நதிகளில் ஒன்றான அா்ச்சுனா நதிக்கரையிலுள்ள தொன்மையான இடங்களிலும் சுமாா் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கருவிகளே அதிகம் கிடைத்தன. அத்துடன் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிகம் கிடைத்துள்ளன.

சங்க காலத்தில் சுத்தியலாகப் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி ஒன்று சங்கரநத்தத்தில் கண்டெடுக்கப்பட்டது. மிக அரிதாகவே கற்கால கருவிகள் இந்தப் பகுதியில் கிடைக்கின்றன.

ஆகவே, இந்த இடத்தில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தங்களின் தேவைக்காக கற்கால கருவிகளை வேறு இடத்திலிருந்து கொண்டு வந்து இங்கு பயன்படுத்தி இருக்கலாம். சுமாா் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கருவி காலம் முதல் பெருங்கற்காலமான சங்க காலம் வரை தொடந்து மக்கள் இங்கு வசித்து வந்ததால்தான் வைப்பாற்றங்கரைகளில் செழுமையான நாகரிகம் செழித்தோங்கி வளா்ந்து இருப்பதை அறிய முடிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT