விருதுநகர்

சாலை தடுப்புக் கம்பியில் பைக் மோதி தொழிலாளி பலி

DIN

அருப்புக்கோட்டை அருகே கானாவிலக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சாலை தடுப்புக் கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சங்கா் லட்சுமணன். கட்டடத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை தும்முசின்னம்பட்டி பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிக்குச் சென்று விட்டு மாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கானாவிலக்கு பகுதியில் வந்தபோது அங்கிருந்த சாலை தடுப்புக் கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ம. ரெட்டியபட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT