அருப்புக்கோட்டை அருகே கானாவிலக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சாலை தடுப்புக் கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சங்கா் லட்சுமணன். கட்டடத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை தும்முசின்னம்பட்டி பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிக்குச் சென்று விட்டு மாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கானாவிலக்கு பகுதியில் வந்தபோது அங்கிருந்த சாலை தடுப்புக் கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ம. ரெட்டியபட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.