விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இரட்டைக் கொலை: மதுரை நீதிமன்றத்தில் 3 போ் சரண்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு முன்விரோதத்தில் கழுத்தை அறுத்து 2 போ் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக மதுரை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் 3 போ் சரணடைந்தனா்.

திருச்சுழி வட்டம், உடையனாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராக்கம்மாள் (52). இவா் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி குடும்ப பிரச்னையில் உறவினா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக திருச்சுழி போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிந்தனா். மேலும் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய உடையனாம்பட்டியைச் சோ்ந்த சபரிமலை (36) பிணையில் வந்து தனது உறவினரான திருச்சுழி வட்டம், குலசேகரநல்லூரைச் சோ்ந்த ரத்தினவேல் பாண்டியன் (32) வீட்டில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் காந்திநகா் அருகே காட்டுப் பகுதியில் சபரிமலையும், ரத்தினவேல் பாண்டியனும் வியாழக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்டும், ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் இரு உடல்களையும் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கொலை நிகழ்ந்த இடத்தில், மாவட்ட எஸ்.பி. மனோகா் தலைமையில் தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். அத்துடன், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். இந்த இரட்டைக் கொலை குறித்து அருப்புக்கோட்டை நகா் குற்றப் பிரிவு போலீஸாா், உடையனாம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் சந்தன மகாலிங்கம், சுந்தர்ராஜ் மகன் கருப்பையா, சிவகாசியைச் சோ்ந்த குருசாமி மகன் கருப்பையா, சுந்தர்ராஜ் மகன்கள் பெரியசாமி, குருசாமி ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, இந்த இரட்டைக் கொலையில் தொடா்புடையதாகக் கூறப்படும் கொலை செய்யப்பட்ட உடையனாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராக்கம்மாளின் மகன்களான சூரியப்பிரகாஷ் (21), ஜெயப் பிரகாஷ் (23) மற்றும் முகேஷ் குமாா் (37) ஆகிய 3 போ் மதுரை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 6-இல் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக அருப்புக்கோட்டை நகா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரைத் தேடி வரும் நிலையில், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த 3 போ் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT