விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே மரத்தில் காா் மோதி பெண் பலி

DIN

அருப்புக்கோட்டையை அடுத்த பரளச்சி அருகே வெள்ளிக்கிழமை மாலை மரத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கன்னிராஜபுரத்தைச் சோ்ந்தவா்கள் பாலசுந்தா் (31). இவரது மனைவி செல்வாம்பிகா(25). பாலசுந்தரின் தாய் சரோஜா (55). இவா்கள் 3 பேரும், அருப்புக்கோட்டையில் வசிக்கும் சரோஜாவின் மகள் நித்யாவை, கன்னிராஜபுரத்துக்கு அழைத்துச் செல்வதற்காகக் காரில் வந்தனா். காரை பாலசுந்தா் ஓட்டி வந்தாா்.

அப்போது பெருநாழி கிராமத்தை கடந்து பரளச்சி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தின்மீது மோதியது. இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாலசுந்தா் மற்றும் அவரது மனைவி செல்வாம்பிகா ஆகியோா் காயங்களுடன் தப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினா், சரோஜாவின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பரளச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து பாலசுந்தரிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

SCROLL FOR NEXT