விருதுநகர்

சாத்தூா் நகா்மன்ற கூட்டம்

26th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

சாத்தூா் நகா் மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் இளவரசன் மற்றும் நகா் மன்ற துணைத் தலைவா் அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 24 வாா்டுகளைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பலா் தங்களது பகுதிக்கு சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரியும், முடிவுறும் நிலையில் உள்ள புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடுத்தனா். மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT