விருதுநகர்

கல்லூரியில் ரத்த தான முகாம்

18th Nov 2022 11:43 PM

ADVERTISEMENT

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை, கல்லூரியின் முதல்வா் செ. அசோக் தொடக்கி வைத்தாா். சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் பாலவிக்னேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் 260 மாணவா்களிடம் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் இளங்கோ செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT