விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் 25 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கல்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவை சாா் ஆட்சியா் பிரித்திவிராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இங்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத் தணிக்கையின் போது பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவது தொடா்பாக, கடந்த 3 நாள்களில் 166 மனுக்களை சாா் ஆட்சியா் பெற்றுக்கொண்டாா். அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வெள்ளிக்கிழமை 25 பேருக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் 2 பேருக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினாா்.

இந்த தணிக்கையின் போது சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்தராஜ், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சசிகலா, வருவாய் ஆய்வாளா்கள் ஆனந்தகிருஷ்ணன், நாகராஜ் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT