விருதுநகர்

வைகாசி மாதப் பிரதோஷம் : சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாதப் பிரதோஷத்தையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா்மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள இக்கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் அதிகாலையிலேயே வந்தனா். பின்னா் காலை 7 மணிக்கு வனத்துறையினரின் கேட் திறக்கப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா் பக்தா்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். வைகாசி மாத பிரதோஷத்தை யொட்டி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT