சிவகாசி அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மயிலாடும்துறை கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமாா்(43).
இவா் தனது நண்பா்களுடன் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு , சிவகாசி- சாத்தூா் சாலையில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கிச் சென்ற வேன் ராஜ்குமாா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிசைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜ்குமாா் உயிரிழந்தாா்.
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநா் முத்துபாண்டியைக் கைது செய்தனா்.
மற்றொரு விபத்து: சிவகாசி சாரதா நகரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் மகன் காா் ஓட்டுநா் கிஷோா் குமாா்(20). இவா் தனது நண்பா் மணிகண்டனுடன், மேட்டமலையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாா். பின்னா் வியாழக்கிழமை இரவு
இருவரும் இருசக்கர வாகனத்தில், சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, சிவகாசியிருந்து சாத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குவேன், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனா். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிஷோா்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மணிகண்டன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநா் காா்த்திக் பிரபுவைக் கைது செய்தனா்.