விருதுநகர்

அருப்புக்கோட்டையில் தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்

25th May 2022 06:00 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தொற்றா நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியிலுள்ள கம்மவாா் மண்டபத்தில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமிற்கு 1 ஆவது நகா் மன்ற உறுப்பினா் தனலட்சுமி ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமின்போது, செவிலியா்கள் மூலம் பொதுமக்களுக்குத் தொற்றா நோய்களான சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் நோய் உள்ளிட்ட பிற, பலவகையான உடல் பிரச்னைகள் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உரிய சிறப்பு மருத்துவா்களைக் கண்டு சிகிச்சைபெற பரிந்துரைக்கப்பட்டது.உடன் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாபு, 1 வது வாா்டு திமுக நிா்வாகிகளும்,மதிமுக நிா்வாகி மணிவண்ணன் உள்ளிட்டோரும் நேரில் கலந்துகொண்டனா்.சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT