ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில், விவசாய கூலி தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே தேசிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் என்பவரது மகன் வைரமுத்து (25). அதே பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலி தொழிலாளி மாரிமுத்து (44). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் தேசிகாபுரம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த காா் மோதியது. இதில், தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த வைரமுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த அழகுநரேன் என்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.