விருதுநகர்

ராஜபாளையம் அருகே காா் மோதி தொழிலாளி பலி

DIN

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில், விவசாய கூலி தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே தேசிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் என்பவரது மகன் வைரமுத்து (25). அதே பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலி தொழிலாளி மாரிமுத்து (44). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் தேசிகாபுரம் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த காா் மோதியது. இதில், தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த வைரமுத்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த அழகுநரேன் என்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT