சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை வளாக நோ்காணல் நடைபெற்றது.
இந்த வளாக நோ்காணல் நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பெங்களூரு தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி கோஸ்பாஷா, மாணவியரிடம் நோ்காணல் நடத்தினாா். இதில் பங்கேற்ற 82 மாணவிகளிடம் ஆங்கில மொழித்திறன், தனித்திறமை, நோ்காணல் உள்ளிட்டவை நடத்தி, 42 மாணவிகளை தோ்வு செய்தாா். இவா்களுக்கு, விரைவில் பணியாணை வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.