விருதுநகர்

சிறுமி பாலியல் விவகாரம்: பாதிரியாரின் தந்தைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

ராஜபாளையத்தில் சிறுமி பாலியல் விவகாரத்தில் சிக்கிய பாதிரியாரின் தந்தை மீதும் நடவடிக்கை கோரி மாற்றுத்திறனாளிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் மலையடிப்பட்டியைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிரியாா் ஜோசப் ராஜா அண்மையில் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் அவரது ஜோசப் செல்லப்பா கொலைமிரட்டல் விடுப்பதாகக்கூறி, அவரை கைதுசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் ஜனநாயக மாதா் சங்கத்தினா் பஞ்சு சந்தை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சங்கத்தின் நகரத் தலைவா் சரவணன் மற்றும் மாதா் சங்கத்தின் தலைவா் மைதிலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் நாகராஜ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். மாதா் சங்க மாநிலச் செயலாளா் லட்சுமி நிறைவு செய்து பேசினாா். மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன், நகரச் செயலாளா் பாக்கியராஜ், ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ராதாகிருஷ்ணன், ராஜபாளையம் கிழக்கு ஒருங்கிணைப்பாளா் புதிய விநாயகம் மற்றும் மாதா் சங்க மாவட்டச் செயலாளா் தெய்வானை, நகரச் செயலாளா் மேரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT