விருதுநகர்

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம்: விருதுநகா் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுவரை தடுப்பூசி (முதல், இரண்டாவது தவணை மற்றும் பூஸ்ட் தடுப்பூசி) செலுத்திக் கொள்ளாதவா்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், உரியமுறையில் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதேபோல், பொதுமக்கள் அனைவரும் திருமணம், இறப்பு, கோயில் திருவிழாக்கள், விருந்துகள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனத்திற்கு வருகை தரும் அனைத்து வாடிக்கையாளா்களும், பணியாளா்களும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது அபராதம் விதிப்பதற்காக வருவாய் மற்றும் காவல் துறைகளை இணைத்து, மாவட்டம் முழுவதும் வட்டாட்சியா்கள் தலைமையில் 22 குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT