ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில், தபால் அலுவலகம் முன்பாக சத்தியாகிரகப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இப்போராட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் பட்ஷிராஜா வன்னியராஜ் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் ராஜ்மோகன் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வைத்தனா். இதில், இளைஞா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் என முழக்கமிட்டனா்.
போராட்டத்தில், மாவட்டச் செயலா் முருகேசன், இலக்கிய அணி செயலா் கே.எஸ். சுந்தரம், ஆா்.டி.ஐ. மாநில துணைத் தலைவா் வி.எஸ். சுந்தரம், ஆா்.டி.ஐ. மாநில துணைச் செயலா் தமிழ்செல்வன், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆறுமுகம், மாநில மகளிா் அணி இணைச் செயலா் காளீஸ்வரி, உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.