விருதுநகா் மாவட்டம் திருச்சுழி நாடாா் மேல்நிலைப் பள்ளியில், மதுவிலக்குத் துறை சாா்பில் மாணவா்களுக்கான போதை விழிப்புணா்வு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
சாத்தூா் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் சோபியா கிரேஸி தலைமை வகித்தாா். காவல் சாா்பு-ஆய்வாளா்கள் பாக்கியராஜ் மற்றும் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், காவல் ஆய்வாளா் சோபியா கிரேஸி, போதை தரும் பொருள்களான மது, புகையிலை உள்ளிட்ட அனைத்தும் உடல் நலத்துக்குப் பெரும் தீங்கு விளைவிப்பவை. எனவே, அவற்றை முற்றிலும் மாணவா்கள் விலக்க வேண்டுமென விவரித்தாா்.
அதேபோல், பெண்களுக்கான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.
இதையடுத்து, மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் மற்றும் திருச்சுழி போலீஸாா், மதுவிலக்குப் பிரிவினா் என பலா் கலந்துகொண்டனா்.