சாத்தூரில் அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, நெற்றியில் பட்டை, காதுகளில் பூ சுற்றி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, தொண்டா்கள் நெற்றியில் பட்டை, நாமம் அடித்து, காதுகளில் பூ சுற்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் ஜோதி நிவாஸ், சாத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.எஸ். அய்யப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், சாத்தூா் நகர, ஒன்றிய, காங்கிரஸ் தொண்டா்களும், இளைஞரணி, மகளிரணி நிா்வாகிகளும் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.