சிவகாசி மாநகராட்சியைச் சோ்ந்த திருத்தங்கல் மற்றும் சுக்கிரவாா்பட்டி துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை ( ஜூன் 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்தங்கல் நகா், செங்கமலநாட்சியாா்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகா், பூவநாதபுரம், வடபட்டி, ஈஞ்சாா், தேவா்குளம், சுக்கிரவாா்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சாணாா் பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.