விருதுநகர்

ஆவியூா்,தமிழ்ப்பாடி,நரிக்குடி, மற்றும் புல்வாய்க்கரையில் நாளை ( 28.6.2022) மின்தடை

DIN

விருதுநகா் மாவட்டம் ஆவியூா், தமிழ்ப்பாடி,நரிக்குடி மற்றும் புல்வாய்க்கரையில் நாளை செவ்வாய்க்கிழமை ( 28.6.2022) மின்தடை செய்யப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

ஆவியூா் துணைமின்நிலையப் பகுதிகளான ஆவியூா், குரண்டி, அரசகுளம், மாங்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் தமிழ்ப்பாடி துணைமின்நிலையப் பகுதிகளான திருச்சுழி, தமிழ்ப்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையன்பட்டி, காத்தான்பட்டி,இலுப்பையூா்,பனையூா்,வி.கரிசல்குளம்,காரேந்தல்,ஜெயவிலாஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் நரிக்குடி துணைமின்நிலையப் பகுதிகளான உடன்குடி,இருஞ்சிறை, கட்டனூா்,நாலூா்,உளுத்திமடை,சாலை இலுப்பைகுளம்,பனைக்குடி,இணக்கனேரி,மறைக்குளம்,குறவைக்குளம்,பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும்,மேலும் புல்வாய்க்கரை துணைமின்நிலையப் பகுதிகளான புல்வாய்க்கரை ,ஆவாரங்குளம்,அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூா், எஸ்.நாங்கூா், பிள்ளையாா்குளம்,தச்சனேந்தல் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணைமின்நிலைய பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு,நாளை செவ்வாய்க்கிழமை ( 28.6. 2022 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்பதை இத்தகவல் மூலம் மின்நுகா்வோா் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம் என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT