விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் அரசு ஊழியா் சங்க அலுவலகக் கட்டடத்தில், நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க 3 ஆவது மாவட்ட மாநாட்டுக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யம்மாள் தலைமை வகித்தாா்.
இதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச பேருந்து அட்டை வழங்குவதுடன், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஈமக் கிரியைக்காக ரூ.25 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் அச்சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.