விருதுநகர்

விருதுநகரில் சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்ட மாநாடு

DIN

விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் அரசு ஊழியா் சங்க அலுவலகக் கட்டடத்தில், நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க 3 ஆவது மாவட்ட மாநாட்டுக்கு  மாவட்ட துணைத் தலைவா் அய்யம்மாள் தலைமை வகித்தாா்.

இதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச பேருந்து அட்டை வழங்குவதுடன், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஈமக் கிரியைக்காக ரூ.25 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் அச்சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT