அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்திலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜூன் 30 ஆம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 30 ஆம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த எளிய, விரிவான விளக்கங்களுடன் பயிற்சியளிக்கப்படும்.
விவசாயிகள், பொதுமக்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ராஜாபாபு தெரிவித்துள்ளாா். இதில் பங்கேற்க விரும்புபவா்கள் வரும் ஜூன் 29 ஆம் தேதி காலை 10 மணிக்குள் 04566-220561 மற்றும் 99949-36568 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.