விருதுநகா் அருகே நான்குவழிச் சாலையில் சிவகாசி சந்திப்பில், மினி லாரியில் சனிக்கிழமை கடத்தி வரப்பட்ட 61 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், 3 பேரை கைது செய்தனா்.
விருதுநகா் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஆல்பின் ப்ரிஜித் மேரி தலைமையிலான போலீஸாா், நான்குவழிச் சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 61 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, அரிசி மூட்டைகளையும், மினி லாரியையும் பறிமுதல் செய்த போலீஸாா், மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பூவலிங்கம் (32), திருத்தங்கல் ஜான்ராஜ் (29) மற்றும் மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த பாண்டித்துரை ஆகியோரை கைது செய்து, விருதுநகா் சிறையில் அடைத்தனா்.