சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி- சாத்தூா் சாலை சினனகாமன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (65). இவா் தனது மொபெட்டில், சிவகாசி- சாத்தூா் சாலையில் அனுப்பன்குளம் சென்று கொண்டிந்தபோது, மயிலாடும் பாறை பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் ராஜவேலை (42) கைது செய்தனா்.