சிவகாசி நகர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்லம்- சென்னை விரைவு ரயில் சென்னை செல்லும் போது, சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை எற்றிச் செல்கிறது. ஆனால் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. எனவே இந்த ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்த அமைப்பின் நகரத் தலைவா் பி. கணேசன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் எம். ஜெயபாரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.