விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அருகேயுள்ள ஒட்டன்குளம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
ஒட்டன்குளத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பையா (52). இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஞாயிற்றுக்கிழமை உறவினா் வீட்டுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டாா்.
மறுநாள் திங்கள்கிழமை வீடு திரும்பிய இவா், கதவு திறந்து கிடந்துள்ளதைக் கண்டுள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனே, வீரசோழன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்தக்கு வந்த போலீஸாா், ஆய்வு செய்தனா். பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.