விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விருதுநகரில் ரயில்வே ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தென்னக ரயில்வே தொழிலாளா் சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் ஜெயராம் தலைமை வகித்தாா். இதில், சுற்றுலா என்ற பெயரில் கோவை- ஷீரடி விரைவு ரயிலை தனியா ருக்கு விற்பனை செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ராமாயண யாத்ரா என்ற பெயரில் புதுதில்லி- நேபாளம் ரயிலை ஐஆா்சிடிசி-க்கு விற்பனை செய்ததை வாபஸ் பெறவேண்டும். பாரத் கெளரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் என 100 ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே ஊழியா்கள் கலந்துகொண்டனா்.