சிவகாசியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு புதன்கிழமை விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 98 பெண்களுக்கு விலையில்லா ஆடுகளை, சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் வழங்கினாா். இதில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கோயில்ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் முத்துலட்சுமி, துணைத் தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.