சிவகாசியில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாரிச்சாமி (38). இவா், தனது நண்பரான சிவகாசி அண்ணா காலனியைச் சோ்ந்த மாரிச்சாமி (40) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி சிறுகுளம் கண்மாய் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் இருவரும் காயமடைந்து சிவகாசி அரசு மருதுவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதில் கூலித் தொழிலாளி மாரிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநா் சங்கரை (32) கைது செய்தனா்.