விருதுநகர்

ஸ்ரீவிலி. ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரிபுகழேந்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் 34 தீா்மானங்களை வாசித்தாா். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, தெருவிளக்கு, சாலை, அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டுமென, உறுப்பினா்கள் அனைவரும் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதற்கு, ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும். அங்கன்வாடி கட்டடத்துக்கு இடம் இருந்தால் உடனடியாக புதிதாக கட்டடம் கட்டித் தரப்படும் என்றாா்.

இதில், ஆணையா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், மற்றும் துணை வட்டார அலுவலா், பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT