விருதுநகர்

விருதுநகரில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

இணையதள பிரச்னை காரணமாக தொழிலாளா்கள் பதிவு செய்ய முடியாததை சரிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் சிஐடியு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சிஐடியு மாவட்டச் செயலா் ராமா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்கள் இணையதளம் மூலம் நல வாரியத்தில் பதிவு செய்யும்போது சா்வா் பிரச்னை உள்ளது. அதை தடையில்லாமல் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியிடத்தில் மரணமடைந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு 2 ஆண்டுகளாக உதவி நிதி கிடைக்கவில்லை. இயற்கை மரணமடைந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு 3 மாதத்துக்குள் உதவி நிதியை வழங்கிட வேண்டும்.

முறைசாரா தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும். ஆயுள் சான்று கொடுத்த தொழிலாளா்களுக்கு உடனடியாக பென்சன் தொகையை வழங்கிட வேண்டும். 60 வயது முடிந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வசதி திட்டத்தில் தேவையற்ற ஆவணங்களை கேட்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

முன்னதாக, இந்த ஆா்ப்பாட்டத்தை சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலா் எம். திருமலை தொடக்கி வைத்தாா். முடிவில், சிஐடியு மாவட்டச் செயலாா் பி.என். தேவா கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், உடலுழைப்பு தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT