விருதுநகர்

ராஜபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா்களை தாக்கி கைது செய்த காவல் துறையை கண்டித்து, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் நகரத் தலைவா் பாக்யராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சரவணன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் வீரமணி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டக் காவல் துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் பாரத் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் ராஜபாளையம் கிளையின் தலைவா் மைதிலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT