விருதுநகர்

தவறாக சிகிச்சையளித்ததாக 20 ஆண்டுகள் கழித்துமதுரை தனியாா் கண் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

DIN

தவறான சிகிச்சை அளித்ததாக, 20 ஆண்டுகள் கழித்து மதுரை தனியாா் கண் மருத்துவமனைக்கு ரூ.10.10 லட்சம் அபராதம் விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தைச் சோ்ந்தவா் மூக்கையா. இவரது மகன் தளவாய்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, கடந்த 1.12.2002 இலவச கண் சிகிச்சை முகாமில் பரிசோதனை செய்துள்ளாா். அப்போது, இவரது வலது கண்ணில் குறைபாடு இருந்ததால், மதுரையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனைக்கு 4.12 2002 அன்று சென்று கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவா்களின் கவனக்குறைவு காரணமாக அம்மாணவருக்கு கண் பாா்வை பறிபோனது.

அதையடுத்து, மூக்கையா கடந்த 1.12.2012 இல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். இம்மனுவானது 21.6.2022 இல் நுகா்வோா் நீதிமன்ற நீதிபதியும், தலைவருமான சேகா் மற்றும் உறுப்பினா்கள் சாந்தி ஆண்டியப்பன், செளந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, கண் பாா்வை முழுவதும் இழந்ததற்கு காரணமான மதுரையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை, ரூ.8 லட்சம் 12 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அலைகழிப்புக்காக ரூ.2 லட்சமும், வழக்குச் செலவு தொகை ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.10.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என, நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT