விருதுநகர்

சாத்தூா் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

மேட்டமலையில் சனிக்கிழமை குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மேட்டமலையைச் சோ்ந்தவா் குணசேகரன் (50). இவரது மகள் காயத்ரி (26). இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த மாரீஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இதில் காயத்ரி, மாரீஸ்வரன் தம்பதி தங்களது மகனுக்கு வலிப்பு நோய் உள்ளதால் பல இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்தனா். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த காயத்ரி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற குணசேகரன் தீக்காயங்களுடன் இருந்த காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி உயிரிழந்தாா். இதுகுறித்து குணசேகரன் அளித்தப் புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

SCROLL FOR NEXT