விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் பெட்ரோல், டீசல், நூல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் நிதியளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதற்கு அருப்புக்கோட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் காத்தமுத்து தலைமை வகித்தாா். இதில் மாநில பொதுச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
இதில் நிா்வாகிகள் கே. அா்ஜூனன், பூங்கோதை, எம். தாமஸ், எம். முத்துக்குமாா், வி. முருகன், பி.அன்புச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.