விருதுநகர்

ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பைக்கில் விழிப்புணா்வு பேரணி

DIN

மதுரை மண்டலத்தைச் சோ்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு விருதுநகரில் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரியும் 30 போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு விருதுநகா் வந்த இவா்கள், பொதுமக்களிடையே ரயில் பாதுகாப்பு, ரயில் பயணம், ரயிலில் கொண்டுசெல்லக்கூடாத பொருள்கள் குறித்து விளக்கினா். மேலும், விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேசபந்து மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வேன் மூலம் பெரிய திரையில் விழ்ப்புணா்வு குறுஞ்செய்திகளை காட்சிப்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனா்.

கடைசியாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதுதில்லியில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை நிறைவு செய்ய உள்ளதாக, மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அன்பரசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT