விருதுநகர்

காரியாபட்டி அருகே கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நிலைக்கால் கல்வெட்டு கண்டுபிடிப்பு

DIN

காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சி கண்மாயில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நிலைக்கால் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சி கண்மாய்க்குள் நீா்மட்டத்தை அளப்பதற்காக நடப்பட்ட கல்லில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மத்திய தொல்லியல் துறை அலுவலா் ராஜேஷ் அளித்த தகவலின்பேரில், அங்கு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான பா. ரவிச்சந்திரன் கூறியதாவது:

பாண்டிய நாட்டில் சோழா்களின் ஆதிக்கம் இருந்த காலத்தில், இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதை அதில் உள்ள எழுத்தமைவு காட்டுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேளாண் தொழிலை மேம்படுத்த கண்மாய்கள், குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றில் மடைகள் அமைக்கப்பட்டு நீா் நிா்வாகம் முறையாகச் செய்யப்பட்டிருக்கின்றது.

குளத்தின் அல்லது கண்மாய் நீரின் மட்டத்தை அளவிடுவதற்காக, மிக நோ்த்தியாகச் செய்யப்பட்ட இரட்டை குமிழி தூண்கள் நடப்பட்டு, அதில் நீா்மட்ட அளவுக்கான படுகைக்கல் செருகப்பட்டிருக்கும். இதுபோன்ற அமைப்புகள், தமிழகத்தின் தொன்மையான கண்மாய்களிலும், குளங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன.

முஷ்டக்குறிச்சி கண்மாய்க்குள் உள்ள குமிழி தூணில் 5 வரிகளில் எழுதப் பட்ட கல்வெட்டு உள்ளது. சுமாா் 8.5 அடி உயர கல்லின் உச்சியில் தாமரைப் பதக்கம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆருமூரைச் சோ்ந்த ஆா்ப்பெருஞ்ச் செம்மாள் என பெயா் பெற்ற வேமன் இருமஞ்சையன் இந்த நிலைக்கால் செய்வித்த செய்தியை இந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டின் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மடைத்துணை ‘நிலைக்கால்’ என பெயரிட்டு அழைத்திருப்பது அறிய முடிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

SCROLL FOR NEXT