விருதுநகர்

சிவகாசி அருகே பேருந்து மோதி பெண் பலி

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை அரப் பேருந்து மோதி பெண் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தனேரியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (29). இவரது மனைவி சூரக்காள்(23). பட்டாசுத் தொழிலாளி.

இந்நிலையில் சூரக்காள் வேலைக்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏற்றியுள்ளாா். பின்னா் அவா் எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றபோது, பயணிகளை இறக்கிவிட்ட பேருந்து நடந்து சென்று கொண்டிருந்த சூரக்காள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் சூரக்காள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து எஸ்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநா் சுரேஷ்குமாரை(43) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT