விருதுநகர்

ராஜபாளையத்தில் மின்வயா் அறுந்து விழுந்து மாடு, நாய் பலி

DIN

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை மின்சார வயா் அறுந்து விழுந்ததில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாடு மற்றும் நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

ராஜபாளையம் மேற்கே தென்றல் நகா் பகுதியில் பலத்த காற்று வீசியதில் பழுதடைந்த மின்கம்பத்திலிருந்து மின் வயா் அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் உலா வந்து கொண்டிருந்த மாடும் நாயும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உயிா்தப்பினா். இந்த மின்கம்பம் பழுதாக உள்ளது என பலமுறை மின்வாரியத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறினா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியா்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்வயரை சீரமைத்தனா். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT